For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதனையின் சரித்திரமே, சாதீ யில் சரிந்ததேன்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசின் எம்.ஜி.ஆர்.அதிமுக கட்சிக்கு 2 தொகுதிகள்ஒதுக்கப்பட்டது. ஆனால், ஜாதிக்கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதனை எதிர்த்து எம்.ஜி.ஆர்.அதிமுக கட்சியின் தொண்டர்கள் ஒட்டி உள்ள போஸ்டர் வாசகங்கள் இதோ:

சாதனையின் சரித்திரமே,

சாதீ யில் சரிந்ததேன்?

தேசமோ உழவர் சந்தையின் புகழிடம்!

தேசிய ஜனநாயக முன்னணியோ

ஊழல் சந்தையில் புகலிடம்!

பாதலுக்கு ஒரு நீதி

இந்த பாவிக்கு ஒரு நீதி பகர்வீரோ?

ஊழலுக்கு ஒரு நீதி

உத்தம தலைவனுக்கு ஒரு நீதியா?

வரும் முன் காப்போம் என்றீரே

வன்முறையை வளர்த்து

வள்ளலின் வாரிசை குறைக்கின்றீரே

சாதனை மழையில் நனையாது,

ஜாதீயில் குளிர்காயும் கலைஞரே...

இரு கை போதாமல் அள்ளித்தரும்

இதய வள்ளலுக்கு

இருக்கைகளை குறைக்காதீர்!

--- திருநாவுக்கரசு தற்கொலைப்படை

பா.ஜ.க.விற்கு இணையாக தொகுதிகளை பெற மதிமுக கையாண்ட திமுக தலைமைக்கு எதிரான போஸ்டர் கலாசாரம் மதிமுகவிற்கு 21 தொகுதிகளைபெற்றுத் தந்தது.

அதன் தலைவர் வைகோவிடம் இதுகுறித்து கேட்ட போது தனது கவனத்திற்கு வராமல் நிகழ்ந்த அந்த சம்பவங்கள் பற்றி அறிந்தவுடன் அவற்றைஅகற்ற உத்தரவிடப்பட்டது என்றார்.

திருநாவுக்கரசு தற்கொலை படையினர் பெயரால் ஒட்டப்பட்டு இருக்கும் இந்த போஸ்டரை ஒட்டியவர்களின் நோக்கம் திமுகவிடம் இருந்து அதிகதொகுதிகளை பெறுவதே என திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனை எம்.ஜி.ஆர்.அதிமுக தொண்டர்கள் மறுத்து உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X