ஆயுத ஊழல்: அரசு வழக்கறிஞரால் அரசுக்குப் பிரச்சனை
டெல்லி:
ஆயுத பேர ஊழல் தொடர்பாக சிபிஐக்கான அரசு வழக்கறிஞர் அளித்த புகார் பற்றி விசாரித்து வருவதாக சிபிஐ தெரிவித்து உள்ளது.
சிபிஐ இயக்குநருக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என கோரிஉள்ளார் சிபிஐக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் திவாரி.
தெகல்கா டாட் காம் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ ஒளிப்பதிவை ஆதாரமாக கொண்டு இவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்ய வேண்டும்.
பாதுகாப்புத்துறை ஆயுத பேரங்களில் ஊழல் நிலவுவதை தெகல்கா நிறுவனத்தின் வீடியோ ஆதாரங்கள் அம்பலப்படுத்தி உள்ளது.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்பை விலை பேசி உள்ளனர். இத்தகைய நபர்களை உடனடியாககைது செய்து விசாரிக்க வேண்டும்.
இல்லையெனில், சம்பந்தப்பட்ட ஆதாரங்களை இவர்கள் அழித்து விடக்கூடும் என தனது புகார் மனுவில் தெரிவித்து உள்ளார் திவாரி.
இதனிடையே, திவாரியின் புகாரை ஆதாரமாக கொண்டு முன்னாள் பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணணை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கோரி உள்ளார்.
நீதி விசாரணையை காரணம் காட்டி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க கூடாது.
சமதா கட்சியின் முன்னாள் பொருளாளர் ஜெயின் ஆயுத பேரத்தில் பணம் கைமாறியதை ஒத்து கொண்டு உள்ளார்.
இதில் பா.ஜ.க. தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறியுள்ளதால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
இக்குற்றச்சாட்டை மறுக்க விரும்பும் பா.ஜ.க. தலைவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் எனில் ஜெயின் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரலாம்என கூறினார் ரெட்டி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications