நான் கட்சி மாற மாட்டேன் ... அமைச்சர் செல்வராஜ் சொல்கிறார்
சென்னை:
நான் கட்சி மாறி தி.மு.கவுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்று சமயநல்லூர்எம்.எல்.ஏ. டாக்டர் செல்வராஜு தெரிவித்துள்ளார்.
தி.மு.க. அமைச்சரவையில் உள்ள இரண்டு அமைச்சர்களின் தொகுதிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளகட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தொகுதியான இளையாங்குடி எம்.எல்.ஏவான தமிழ்க்குடிமகன்கட்சியை விட்டு விலகி விட்டார். மற்றொரு அமைச்சரான சமயநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜுவும்அதிருப்தியுடன் உள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால் தான் கட்சி மாறப் போவதில்லை என்று செல்வராஜு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். செல்வராஜுஇதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை விவரம்:
கூட்டணி என்று வரும்போது சில தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய அவசியம்நேரிடலாம். அதுபோலவே, சமயநல்லூர் மற்றும் இளையாங்குடி தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளான புதியதமிழகம் மற்றும் மக்கள் தமிழ் தேசம் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.ஆனால் அதற்காக மனஸ்தாபம்கொண்டு கட்சி மாறும் துரோகத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.
என்னிடமும், தமிழ்க்குடிமகனிடமும் வேறு தொகுதிகள் தருவதாக கருணாநிதி கூறியிருந்தார். ஆனால்அவசரப்பட்டு விபரீதமான முடிவை மேற்கொண்டு விட்டார் தமிழ்க்குடிமகன். அத்தோடு, தொலைக்காட்சிக்குஅளித்த பேட்டியில் என் பெயரையும் தேவையில்லாமல் இழுத்துள்ளார்.
ஒரு கொள்கை உறுதி படைத்தவன் என்ற முறையில், சுயமரியாதை உள்ளவன் என்ற முறையில், கட்சி மாறும்துரோகத்தை நான் செய்ய மாட்டேன். தொடர்ந்து கருணாநிதி தலைமையில்தான் செயல்படுவேன் என்றுகூறியுள்ளார் செல்வராஜு.