இந்தியாவிலும் சாப்ட்வேர் துறை பாதிப்பு
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சாப்ட்வேரில் 90 சதவீதம் அமெரிக்காவுக்குத் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்கத்தால் சாப்ட்வேருக்கு தேவை குறைந்துவிட்டது. இதனால் இந்தியாவில் இருக்கும் சாப்ட்வேர்நிறுவனங்களுக்கும் போதிய புராஜக்ட்கள் கிடைக்கவில்லை.
இதனால், இருக்கும் ஊழியர்களுக்கே வேலை ஏதும் இல்லாமல் ஊதியம் அளித்து வரும் பல சாப்ட்வேர் நிறுவனங்கள், புதிதாக ஆட்களை சேர்ப்பதைஅடியோடு நிறுத்தி வருகின்றன.
இதனால், படித்துவிட்டு வேலை தேடும் சாப்ட்வேர் மாணவர்களின் நிலை மிக பரிதாபமான நிலையில் உள்ளது.
பல சிறிய சாப்ட்வேர் நிறுவனங்களில் புரபேஷனில் இருந்த பல ஊழியர்களை புராஜக்ட் இல்லை எனக் கூறி வேலையை விட்டு தூக்கிய சம்பவங்களும்நடந்துள்ளன.
அமெரிக்காவில் நிலைமை மாறினால் தான் இந்தியாவிலும் நிலைமை மாறும்.
முழுக்க முழுக்க அமெரிக்காவையே சார்ந்து இருந்ததால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே ஐரோப்பா உள்ளிட்ட உலக அளவிலான சாப்ட்வேர் சந்தையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
அமெரிக்காவில் விசா கிடைப்பது எளிதாகவும், அன்னிய நாட்டினரை நடத்தும் விதம் நல்ல முறையில் இருந்ததாலும் அனைவரும் அமெரிக்காவில் குவிந்துவந்தனர்.
அதே போல இந்தியாவை மையமாக வைத்து செயல்படும் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் அமெரிக்காவில் புராஜெக்ட் வாங்குவது எளிதாக இருந்துவந்தது. இதனால், பிற நாடுகளை நாம் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டோம்.