தாமரைக்கனி சுயேச்சையாகப் போட்டி
சென்னை:
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. தாமரைக்கனி, அத்தொகுதியில் சுயேச்சைவேட்பாளராக ஏப்ரல் 18-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
அதிமுகவில் சீட் தர மறுத்ததால், அதிருப்தி தெரிவித்த தாமரைக்கனி கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்டார். அதுமட்டுமல்லாது, அவரது குடும்பத்திலும் குழப்பம் விளைவித்தார் ஜெயலலிதா. மகனைப் பிரித்து அவரை விட்டே,தாமரைக்கனிக்கு எதிராக அறிக்கை விட வைத்தார் ஜெயலலிதா.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார் தாமரைக்கனி.இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் 18-ம் தேதிஊர்வலமாக சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்வேன். அதிக வித்தியாசத்தில் ஜெயலலிதா நிறுத்தும் வேட்பாளரைதோற்கடிப்பேன்.
திமுக, மதிமுக, பா.ஜ.க. போன்ற கட்சிகளில் சேர நான் பேச்சு நடத்தவில்லை. திமுக கூட்டணியில் குழப்பம்ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியும் வலுவாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எனவே கூட்டணிக் குழப்பங்களில் சிக்காமல் தனித்துப் போட்டியிடுவதே நல்லது என எனது ஆதரவாளர்கள்தெரிவித்தனர். எனவேதான் தனித்துப் போட்டியிடுகிறேன் என்றார் தாமரைக்கனி.












Click it and Unblock the Notifications