முன்னாள் காங்.எம்.எல்.ஏ. அனந்தநாயகி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்த நாயகி புதன்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 75.
தமிழக சட்டசபையில் 1952 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அனந்தநாயகி.
இவர் கடந்த ஒரு ஆண்டாக உடல் நலம் இல்லாமல் இருந்தார். உடல் நலம் இல்லாமல் இருந்த இவர் புதன்கிழமைஇரவு 10.30 மணிக்கு சென்னை பார்னாதி ரோட்டில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். இவருக்கு கணவர்மற்றும் மகன் உள்ளனர்.
அனந்த நாயகி காமராஜர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த போது, தமிழ்நாட்டின் துணைத் தலைவராகவும்,பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். அனந்த நாயகி சிறந்த வக்கீலாகவும் இருந்தவர்.
இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமைஇறுதிச்சடங்குகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications