For Daily Alerts
Just In
ஷார்ஜாவில் கிரிக்கெட் போட்டி துவங்கியது
ஷார்ஜா:
ஷார்ஜாவில் மூன்று நாடுகள் பங்கு பெறும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித்தொடர்ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.
இந்த போட்டியில் பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் முதலில் இந்தியா, பாகிஸ்தான். இலங்கை ஆகிய 3 நாடுகள்பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இந்தியாவின் வன்முறையைத் தூண்டிவரும்பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என இந்திய அணிக்கு இந்திய அரசுஉத்தரவிட்டுவிட்டது. இதனால் இந்தியா பங்கேற்கவில்லை.
இதையடுத்து இந்தியாவுக்கு பதிலாக நியூசிலாந்து இந்த போட்டியில் பங்கேற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை துவங்கிய முதல் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள்மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்செய்வது என முடிவு செய்து ஆடி வருகிறது.
Comments
Story first published: Sunday, April 8, 2001, 5:30 [IST]