அதிமுக தொகுதிப் பட்டியல்: அம்மா.. இப்படி செய்யலாமா!
சென்னை:
ஒரு பக்கம் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டேஇரவோடு இரவாக திடீரென இது தான் அதிமுக போட்டியிடப் போகும் பட்டியல் என 141 தொகுதிகளைஜெயலலிதா அறிவித்ததால் மூப்பானாரும் பிற கூட்டணிக் கட்சிகளும் கடும் வெறுப்பில் உள்ளனர்.
அதிமுக போட்டியிடவுள்ள 141 தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்துவிட்டார். இது குறித்து கூட்டணிக்கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஜெயலலிதா ஏதும் ஆலோசிக்கவேயில்லை.
பா.ம.க. தலைவர் ராமதாசுடன் மட்டும் பேசிவிட்டு பட்டியலை வெளியிட்டுவிட்டார். இதில் 21 தொகுதிகள்த.மா.கா. கடந்த தேர்தலில் வென்ற இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூப்பனார் ஆலோசனை:
தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து மூப்பனார், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தங்கபாலு, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனைநடத்தினர்.
கூட்டம் முடிந்த வெளியே வந்த நல்லகண்ணு கூறுகையில், அதிமுக தனது தொகுதிகளை மட்டும்அறிவித்திருந்தால் பரவாயில்லை. ஆனால், த.மா.கா. வென்ற இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கேட்டு வரும்திருப்பூர், நாங்குனேரி, பெருந்துறை ஆகிய தொகுதிகளையும் தனக்கு எடுத்துக் கொண்டது சரியல்ல. இதைஜெயலலிதா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
10ம் தேதி நடக்கும் எங்களது கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் இது குறித்துப் பேசுவோம் என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் மூப்பனாரைச் சந்தித்துஇது குறித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலசுப்பிரமணியம், எனது கருத்தை மூப்பனாரிடம்தெரிவித்துவிட்டேன். இனி அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
நிருபர்களிடம் தங்கபாலு கூறுகையில், என்ன செய்வது என்பது குறித்து த.மா.கா.வும் காங்கிரசும் ஆலோசித்துவருகிறோம். இது தவிர வேறு எதையும் சொல்ல நான் தயாராக இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications