மான் வேட்டையாடிய கும்பல் கூண்டோடு கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
பெண் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை கூறு போட்ட 8 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சிப் பகுதியில், இந்திராகாந்தி வன உயிரியல் மண்டலம் உள்ளது. இந்தமண்டலத்தில் மான், கருங்குரங்கு, காட்டெருமை போன்ற வன விலங்குகள் அதிகமாக உள்ளன.
இந்த மண்டலத்தில் 8 பேர் கும்பல், வன வேட்டையில் இறங்கி வேட்டையாடியது. இதில் ஒரு பெண் மானைக்கொன்று அவர்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களைச் சுற்றி வளைத்து வனத் துறையினர் கைது செய்தனர். இவர்களில் கிட்டு, மெய்யப்பன், அப்புக்குட்டி,செல்வம், கேசவன், ரகுகிருஷ்ணன், தர்மராஜ், ஆளுக்கழுகன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும்45 வயது முதல் 55 வயதிற்குட்பட்டவர்கள்.
மான்வேட்டை தொடர்பாக இவர்களைக் கைது செய்து தோலையும் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications