குளத்தூர் வாக்கு சாவடியில் பாதுகாப்பு தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 வாக்குச் சாவடிகளில் காவலுக்குநியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சாவடிகளை வீரப்பனோ, அவனது கூட்டாளிகளோ தாக்கக் கூடும் எனஅஞ்சப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்று வீரப்பன் விடுவித்தார்.இதையடுத்து, வேட்பாளர்களை வீரப்பன் கடத்தக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே இதனையொட்டி, குளத்தூர், பவானிசாகர் போன்ற மலையோர தேர்தல் சாவடிகளில் போலீஸ்பாதுகாப்பைப் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை இப்பகுதிகளில்குவிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே, அரசியல் கலவரம், சாதிக் கலவரம், மதக் கலவரம், தீவிரவாதம் என்ற அச்சுறுத்தலில் தமிழகத் தேர்தல்அமைதியாக நடக்குமா என்பதில், சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய பகுதிகளாக தேர்தல் கமிஷன் 50 சதவீத தொகுதிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு உரிய போலீஸ்பாதுகாப்பு போட முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக மக்களின் வாக்களிக்கும் சதவீதம் எந்த விதத்திலும் குறைந்துவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியுடன் செயலாற்றி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+