தேர்தல் விதிமுறையை மீறிய அதிமுக எம்.பி. மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தேர்தல் அறிவிப்பிற்குப் பின்னர் தண்ணீர் பந்தல் அமைத்து தேர்தல் விதிமுறையை மீறி வாக்கு சேகரிக்க "பரிசுகொடுக்க முயன்றதாக அதிமுக எம்.பி உள்பட 4 பேர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் அருகே உள்ள சித்தோட்டில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் வேண்டுகோளுக்கு இணங்க,கோடை வெயிலுக்கு நீர் மோர் அளிக்கும் செயல் திட்டம் தொடங்கப்பட்டது.
தேர்தல் அறிவிற்குப் பிறகு இங்கு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை அதிமுக, கோபித் தொகுதி எம்.பி.கே. காளியப்பன் துவக்கி வைத்தார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்குப் புகார் சென்றது.
இந்த தண்ணீர் பந்தல் அமைப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரி சித்தோடு போலீசாருக்குஉத்தரவிட்டார். இதையடுத்து அதிமுக எம்.பி. காளியப்பன் உள்பட 4 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications