தி.மு.க.வில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட சீட் கேட்டு கிடைக்காத எம்.எல்.ஏக்கள் தி.மு.க.விலிருந்துராஜினாமா செய்துள்ளனர்.
அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்திருந்ததற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு சீட் தரப்படவில்லை.
இதனால் வருத்தமடைந்த சில எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.விலிருந்து விலக முடிவெடுத்துள்ளனர்.
பவானி எம்.எல்.ஏ. ஆண்டமுத்துவுக்கு சீட் கொடுக்கப்படாமல் பவானி தொகுதி தி.மு.க. கூட்டணியில் இருக்கும்ஜாதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த ஆண்டமுத்து கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அனைத்துபொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
தான் விலகுவதற்கான காரணம் குறித்து தி.மு.க. தலைவருக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.
சென்றமுறை தேர்தலில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தொகுதிக்கு நான் செய்தபணிகள் பற்றி நீங்கள் என்னை சட்டசபையில் பாராட்டி பேசினீர்கள். ஆனால் எனக்கு தேர்தலில் சீட்கொடுக்கப்படவில்லை.
நீங்கள் ஜாதி அமைப்புகளை ஆதரித்து வருவது எதிர்காலத்தில் தமிழகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதற்காக கட்சியிலிருந்து விலகுகிறேன் என அவர் தனது கடிதத்தில்கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்ற திருவெறும்பூர் எம்.எல்.ஏ. துரைக்கும்இந்த முறை சீட் கொடுக்கப்படவில்லை.
அவருக்கு பதிலாக ஒன்றிய செயலாளர் சேகரனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
துரை, தொகுதி மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்யவில்லை என திருவெறும்பூர் தி.மு.க.வில் கோஷ்டி பூசல்ஏற்பட்டது. மீண்டும் துரைக்கு தேர்தலில் சீட் கொடுத்தால் தாங்கள் அனைவரும் தி.மு.க.விலிருந்து விலகுவோம்என தி.மு.க.தலைமைக்கு திருவெறும்பூர் தி.மு.க. நிர்வாகிகள் ஃபேக்ஸ் மூலம் தெரிவித்தனர்.
இதன் காரணமாக கட்சி மேலிடம் இவரிடம் அதிருப்தி கொண்டது. இதையடுத்து இந்த முறை இவருக்கு சீட்கொடுக்கபடவில்லை. இதனால் அதிருப்தியடைந்த துரை கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இது குறித்து துரை கூறுகையில், நான் கட்சி பணிகளை செய்வதில்லை என என்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுஉள்கட்சி பூசல் காரணமாக கூறப்பட்ட புகார்.
இதுகுறித்து தலைமையிடம் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். இதன் நகலை உள்ளாட்சித் துறை அமைச்சர்என்னிடம் காட்டினார். உள்கட்சி பூசல் காரணமாகதான் எனக்கு சீட் கொடுக்கப்பவில்லை என்றார்.
திண்டுக்கல் தி.மு.க.எம்.எல்.ஏ. மணிமாறனும் தனக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளார். இவர்மு.க.அழகிரியின் ஆதரவாளர்.
இவருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் இடையே பூசல் நிலவி வருகிறது.
தனக்கு சீட் கிடைக்காததால் வருத்தமடைந்துள்ள மணிமாறன் கூறுகையில், நான் பல ஆண்டுகளாக கட்சியில்இருந்து வருகிறேன். பல குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. எந்தகுற்றச்சாட்டும் இல்லாத எனக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
எனக்கு மீண்டும் சீட் கொடுக்க வேண்டும் என கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தனித்துபோட்டியிடுவது குறித்து சிந்தித்து முடிவெடுப்போன் என்றார்.
மணிமாறனை ம.தி.மு.க.வில் சேர்ப்பதற்காக ம.தி.மு.க. நிர்வாகிகள் அவருன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாககூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications