அருந்தமிழில் ஆரம்பக்கல்வி: பாஜக தேர்தல் அறிக்கை
சென்னை:
திருச்சி விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கை:
1. தென்னக நதிகளை இணைக்க வழிவகை செய்யப்படும். காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி, தமிழகத்தின் பங்குகுறைவின்றிக் கிடைக்க பாடுபடுவோம். முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த ஆவணசெய்யப்படும்.
2. பாக் ஜலசந்தியில் சேது சமுத்திரத்திட்டம் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும்.
3. திருச்சி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்றுவோம்.
4. இலங்கைப் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசை வற்புறுத்துவோம்.
5. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் பூசாரிகளுக்கும் மாதாந்திர தொகுப்பூதியம் வழங்கப்படும்.
6. ஆசைகாட்டியோ, அச்சுறுத்தியோ மதமாற்றம் செய்வது தடை செய்யப்படும்.
7. தமிழக மீனவர்கள் நமது கடல் எல்லையில் அச்சமின்றி மீன்பிடிக்க வழிவகை செய்வோம்.
8. விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
9. வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பிற்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுவரும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து கிடைத்திட உத்தரவாதம் அளிக்கப்படும்.
10. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
11. நடப்பு ஆண்டை தமிழ் ஆண்டாக அறிவிப்போம்.
12. அருந்தமிழில் ஆரம்பக்கல்வி அளிக்க தேவையான சட்டதிருத்தம் செய்யப்படும்.
13. தமிழகத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கடுமையாக்கப்படும்.












Click it and Unblock the Notifications