இந்திய ராணுவ ஆயுதக் கிட்டங்கியில் தீ: ரூ 35 கோடி நாசம்
ஜம்மு:
இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆய்வுக் கிட்டங்கி ஒன்றில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தின் காரணமாக 35 கோடி ரூபாய்மதிப்புள்ள ராணுவத் தளவாடங்கள் நாசமாயின என்று பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
பஞ்சாப் மாநிலம் பதாங்கோட்டில் உள்ள அந்தக் கிட்டங்கியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு இந்தத் தீ விபத்துஏற்பட்டது. ஜம்முவிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் நான்கரை மணிநேரம் கழித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இல்லாவிட்டல் பெரும் வெடிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இடைவிடாத மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாகத்தான் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகக் கர்னல்சிங் கூறினார்.
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இங்கு இருந்ததால் நிறையச் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுவது தவறு என்று கூறிய அவர், சுமார் 427 டன் எடையுள்ள ஆயுதங்கள்சேதமடைந்தன என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications