சோனியாவுக்கு வாஜ்பாய் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாடாளுமன்ற மரபுகளை மீறி சோனியா காந்தி பேசுகிறார் என்று பிரதமர் வாஜ்பாய் குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வரும் முன்பு முறைப்படிஎதிர்க்கட்சித் தலைவரான சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது இருக்கை அருகே உள்துறை அமைச்சர்அத்வானி சென்றார்.

அப்போது அவரிடம் வாஜ்பாய் பற்றியும், பாரதிய ஜனதா கட்சியினர் பற்றியும் கோபமாக சோனியா காந்தி புகார்கூறினார்.

சோனியாவின் இந்தப் புகார் அத்வானியை தர்மசங்கடப்படுத்தியது. சோனியாவின் இந்தப் பேச்சுக்கு பிரதமர்வாஜ்பாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சோனியா காந்தி தனது கோபத்தை வெளிப்படுத்த இது சரியான நேரம் அல்ல. இத்தகைய நடவடிக்கைநாடாளுமன்ற மரபுகளை மீறிய செயலாகும்.

மேலும் நான் நாடாளுமன்றத்தில் பேசியது சோனியாவுக்கு ஏன் இவ்வளவு கோபத்தை உண்டாக்கியது என்பதுபுரியவில்லை.

யார் மனதும் புண்படும்படி நான் பேசவில்லை. சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தாரை பழிவாங்குவதாகக்கூறுவது தவறு. சோனியா காந்தி பற்றியோ, இந்திரா, ராஜீவ் காந்தி பற்றியோ பாஜக எம்.பி.க்கள் தவறாகப்பேசவில்லை.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பலமுறை என்னைப் பார்த்துத் தவறாகப் பேசியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நடந்துள்ள மோசமான சம்பவங்களை அனைத்து கட்சியினரும் மறந்து, நாடாளுமன்றத்தின்உயர்ந்த மரபுகள் மீண்டும் தொடர ஒத்துழைக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் வாஜ்பாய்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+