தமிழக தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்க்கிறது: சுர்ஜீத்
மதுரை:
தமிழகத் தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அகில இந்திய மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜீத் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் காளிமுத்துவை ஆதரித்து சுர்ஜீத் பேசுகையில்,பாஜகவின் தெஹல்கா டாட் காம் ஊழலை அடுத்து வேறு பல ஊழல்களும் தற்போது வெளிவந்துள்ளன.
தமிழகத்தில் மதச் சார்பின்மையைக் கட்டிக் காத்த பாரம்பரிய வழியை மறந்த கருணாநிதி அதை விட்டு விலகிச்செல்கிறார்.
பாஜகவுக்கு உதவுவதன் மூலம் அவர் மக்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கிறார். இத்தகைய விரோதிகளுக்குத் தமிழகமக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
பாஜகவின் மதவெறி அரசியலை எதிர்த்து ஜெயலலிதா தலைமையிலான அணி முன்னேறி வருகிறது.
தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. இதனால் மத்திய அரசில் பல மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. எனவே தமிழகத் தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார்.