ஜாதிச் சண்டைகளுக்கு முடிவு கட்டுவோம்: வைகோ
திருநெல்வேலி:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதிச் சண்டைகளுக்கு முடிவு கட்டி, அமைதியை நிலை நாட்டுவோம் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருநெல்வேலியில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது கூறுகையில், அதிமுக மற்றும் திமுகஆட்சிகளைப் பார்த்துச் சலித்துவிட்ட மக்கள், இந்தத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றுநினைக்கிறார்கள். மவுனப் புரட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் விதத்தில் நல்லாட்சி தருவோம்.
எம்ஜிஆரின் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஊழல்கள் மூலம் இம்மாநிலத்தையே சீரழித்தார்.தற்போது கருணாநிதி தன் மகனுக்காகவும் மருமகனுக்காகவும்தான் ஆட்சி செய்கிறார்.
இவருடைய ஆட்சியில் மக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் முறையாகவழங்கப்படவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடுகள் நடக்காது. முன்கூட்டியே சதி செய்துதிட்டமிட்டு எங்களைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றினார் கருணாநிதி.
எங்களுக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வலிமையே இல்லை என்பதுபோல அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
213 தொகுதிகளிலும் மதிமுக தனித்தே போட்டியிடுகிறது என்பதே எங்கள் வலிமையைத் தெளிவாகக் காட்டுகிறதுஎன்றார்.