முதல்வரை கவர்னரே முடிவு செய்வார்: எஸ்.எம்.கிருஷ்ணா
கோவை:
பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்வோரையே கவர்னர் முதல்வராகப் பொறுப்பேற்க அழைக்கமுடியும் என கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்திற்குப் பிரச்சாரம் செய்ய கோவை வந்த கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய அரசியல் சட்டப்படி முதல்வர் யார் என்பதை கவர்னர் முடிவு செய்யமுடியும். எந்தக் கட்சிபெரும்பான்மையுடன் வெற்றி பெற முடிகிறதோ, அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தேர்வு செய்வோரைமுதல்வராகப் பொறுப்பேற்க கவர்னர் அழைக்கலாம்.
மாநில கவர்னர் நடுநிலையுடன் செயல்படுவார் என எதிர்பார்க்கிறோம். கர்நாடகத்தில் நடந்த உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இது சோனியா காந்திக்கு ஏற்பட்ட நற்பெயரால் கிடைத்துள்ளஇடங்கள்.
பாண்டிச் சேரியின் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இதே போல் கேரளாவிலும் காங்கிரஸ்தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள அணிவெற்றி பெறும் என்றார் கிருஷ்ணா.