ஜெ. மனு நிராகரிப்பு தவறானது .. டி.என்.சேஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மெஜாரிட்டி பலத்துடன் வெற்றி பெற்றால், ஜெயலலிதாமுதல்வர் ஆவதை யாராலும் தடை செய்ய முடியாது என்று முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்டி.என்.சேஷன் கூறினார்.

சென்னையில் ஒரு அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சேஷன் பேசியதாவது:

எங்கு பார்த்தாலும் ஊழல் வியாபித்து விட்டது. சட்டமன்றம், நீதித்துறை, அதிகார வர்க்கம் என எங்கு பார்த்தாலும்ஊழல் புற்று இமயமலை போல வளர்ந்து உள்ளது.

தவறு செய்தவர்களும், ஊழல் செய்தவர்களும் தண்டனையில் இருந்து தப்பி வருகிறார்கள். இதற்கு நீதித்துறைநடைமுறையே காரணம்.

ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தவறானது. காரணம், டான்சி வழக்கின் தீர்ப்பைஎதிர்த்து அவர் அப்பீல் செய்துள்ளார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படிச் செய்தாலே, அந்தவழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ததாகத்தான் அர்த்தம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, அந்தக் கூட்டணியின் சட்டசபைத் தலைவராக ஜெயலலிதா தேர்வுசெய்யப்பட்டால், யாராலும் அவர் முதல்வர் ஆவதைத் தடுக்க முடியாது. ஆளுநர் ஜெயலலிதாவை அழைக்காமல்இருக்க முடியாது என்றார் சேஷன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+