தெஹல்கா டாட் காம் ஆசிரியரைக் கொல்ல சதி
டெல்லி:
ஆயுதப்பேர ஊழலை தனது இணைய தள நிருபர்கள் மூலம் அம்பலமாக்கிய தெஹல்கா டாட் காம் இணைய தளஆசிரியர் தருண் தேஜ்பாலைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறியதாவது:
தெஹல்கா டாட் காம் இணையதளத்தை நடத்தி வரும் தருண் தேஜ்பால், இணையதள நிருபர்கள் மூலம் ஆயுதப்பேரஊழலை வெளிக்கொண்டு வந்தார்.
இதையடுத்து அவரைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை நாங்கள் கைதுசெய்துள்ளோம்.
இதற்கிடையே, தருண் தேஜ்பால் (38) தன்னைக் கொல்ல வந்தவர்கள் குறித்து தகவல்கள் எதுவும்கொடுக்கவில்லை. இருப்பினும், தன்னைக் கொல்ல முயற்சித்தவர்கள் குறித்து சில தடயங்களைப் போலீஸாரிடம்அவர் காட்டியுள்ளார்.
"எனது உயிருக்கு ஏற்கனவே பல முறை மிரட்டல்கள் வந்துள்ளது. இதுகுறித்து நான் உள்துறை அமைச்சகத்திடம்புகார் கூறியதால் எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது பாதுகாப்பு மீண்டும்பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று தேஜ்பால் கூறினார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பார்களா என்ற கேள்விக்கு, தான் இதுகுறித்துபதில் எதுவும் கூற விரும்பவில்லை என்றார் தருண் தேஜ்பால்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம், அகில இந்திய பாஜக தலைவர் பங்காரு லட்சுமண் மற்றும் சமதா கட்சித் தலைவர்ஜெயா ஜெட்லி ஆகியோர் லஞ்சம் வாங்கியதை வீடியோ மூலம் படம்பிடித்து அதை நிருபர்கள், காங்கிரஸ் கட்சிபிரமுகர்கள் ஆகியோரிடம் தெஹல்கா டாட் காம் நிருபர்கள் காட்டினர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இரு தலைவர்களும் ராஜினாமா செய்தனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டசும் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிவாஜ்பாய் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்:
தெஹல்கா டாட் காம் இணையதள ஆசிரியர் தருண் தேஜ்பாலைக் கொலை செய்ய முயன்று கைது செய்யப்பட்ட 6பேரும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.உளவாளிகள் என்று தெரிய வந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications