வீரப்பனால் அச்சுறுத்தல் இல்லை: டிஜிபி
சென்னை:
நடக்கவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின்போது சந்தனக் கடத்தல் வீரப்பனால் எந்த வேட்பாளருக்கும்எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று தமிழக டிஜிபி ஆர். ராஜகோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களுத்து அளித்த பேட்டியில்,
தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் வீரப்பன் கூட்டாளிகள் நடமாட்டம் இருப்பதாகக் கருதப்படுகிறது.இருந்தாலும் அந்த மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வீரப்பனால் எந்தத் தொந்தரவும் இதுவரைஇல்லை.
அந்தியூர் பகுதியில் வீரப்பனைத் தேடும் பணியில் சிறப்பு அதிரடிப் படையினரும் எல்லைப் பாதுகாப்புப்படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது காட்டில் ஏற்பட்ட ஒரு விபத்தில் போலீஸ் ஐ.ஜி. ராதாகிருஷ்ணனுக்குக் காலில் எலும்பு முறிவுஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரி அனுப்பப்படுவார் என்று டிஜிபி கூறினார்.
யு.என்.ஐ.