For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடன்பட்டவரின் பிணத்தைப் புதைக்கவிட மறுத்த ஜமாத்

By Staff
Google Oneindia Tamil News

இராமநாதபுரம்:

கடன்பட்டவரின் பிணத்தைப் புதைக்க கிராம முஸ்லீம் ஜமாத் எதிர்ப்பு தெரிவித்தது.

இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தைச் சேர்ந்த ஹசன் இப்ராஹிம் (75).

ஜமாத்தில் உள்ள ஒருவரிடமிருந்து இவர் 2,500 ரூபாய் கடன் வாங்கியிருந்தாராம்.

இந்நிலையில் ஹசன் இறந்துவிட்டார்.

ஆனால், பணத்தைத் திருப்பித் தராமல் அவருடைய பிணத்தை ஜமாத்தில் புதைக்க அனுமதிக்கமாட்டோம் என்று அவருடைய உறவினர்களிடம் எதிர்த்தரப்பினர் கூறினர்.

இதனால், கோஷ்டி மோதல் ஏற்படும் நிலை உருவானது.

இதைத் தொடர்ந்து, கீழக்கரை காவல்துறை அதிகாரி முத்துவேல் சம்பவ இடத்திற்குச் சென்றுசமாதான முயற்சியில் ஈடுபட்டார்.

இருப்பினும், பணம் தராமல் பிணத்தைப் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர் ஜமாத்தைச்சேர்ந்தவர்கள்.

உடனே, தானே அந்தப் பணத்தைத் தருவதாக முத்துவேல் ஒப்புக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, ஹசன் இப்ராஹிமின் பிணம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜமாத் என்ற பெயரில், திருமணம் இறப்பு போன்ற விஷயங்களில் பணம் பாக்கி என்று கூறிக்கொண்டு,திருமணத்தை நிறுத்துவதோ, பிணத்தைப் புதைக்க விடாமல் செய்வதோ பொதுமக்களுக்குவிரோதமான செயல் என்று கூறிய முத்துவேல், தான் ஒப்புக் கொண்டபடி தன்னுடைய கைப்பணத்தில்இருந்து 2,500 ரூபாயை ஜமாத்திடம் கொடுத்தார்.

பிணத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த ஜமாத்தை பல முஸ்லீம் பெரியவர்களும் கடுமையாகக்கண்டித்தனர். இது இஸ்லாமிய மதக் கொள்கைகளுக்கு முரணானது. இது ஒரு மனிதாபிமானமற்ற செயல்என அவர்கள் கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X