தமிழகம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு மந்த நிலையில் இருந்தாலும், கோவையில் மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்கத்தொடங்கியுள்ளனர்.

கோவையில் காலை 7 மணிக்கு வாக்குச் சாவடிகளில் மக்கள் வரிசையைக் காண முடிந்தது. பாரதிய ஜனதாவும், தமிழ் மாநில காங்கிரசும் மோதும் கோவைகிழக்குத் தொகுதியில் பல பூத்துகளில் வரிசையில் நின்று வாக்களார்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதே போன்று புறநகர் பகுதிகளிலும் மக்கள் ஓட்டளிக்க ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் கமிஷனின் புது விதிமுறைகள் மக்களுக்கு சற்று சிரமத்தைஅளித்தாலும், வாக்களிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி என்ற ஊருக்கு போக்குவரத்து வசதி இல்லை. பவானி ஆற்றைக் கடந்து இந்தஊருக்குச் செல்ல பரிசல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கும் அதிகாரிகள் சென்று வாக்குப் பதிவை மேற்கொள்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் அதிகாலையில் குளிர் நிலவுவதால் சற்று மந்தமான முறையிலேயே வாக்குப் பதிவு துவங்கியுள்ளது. இதே போன்று வால்பாறையிலும்ஓட்டுப் பதிவு மந்தமான நிலையில் துவங்கியுள்ளது.

தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் மக்கள் அதிகாலையில் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

எவ்வித சலனம் இன்று அமைதி காத்த மக்கள் ஒரு மவுனப் புரட்சியை ஏற்படுத்தவுள்ளனர். காலை 10 மணிக்குள் 10 சதவீத வாக்குகளுக்கும் மேல்வாக்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நிலையில் வாக்களார்கள் வாக்களித்தால், மாலைக்குள் 60 சதவீத வாக்குகளுக்கும் மேல் பதிவாகும் என அதிகாரிகள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+