கோவை, ஈரோட்டில் 55 சதவீத வாக்குப்பதிவு
கோவை:
கோவை, ஈரோடு மாவட்டங்களில் 55 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.
கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் காலையில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு துவங்கினாலும்,பகல் 12 மணிக்கு மேல் வாக்குப் பதிவு மந்தமானது.
கோவை மாவட்டத்தில் காலையில் 35 சதவீதம் வாக்குப் பதிவாகியிருந்தபோதிலும், மாலை நேரத்தில் 30 சதவீதவாக்குகள் கூட பதிவாகவில்லை.
ஓட்டுப்போட வேண்டும் என நினைத்த எல்லோரும் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட காலையில்வரிசையில் இருந்து வாக்களித்து விட்டனர். மதியத்திற்குமேல் கட்சியினரும் வெப்பத்தால் சேர்ந்து போயினர்.பின்னர் ஓட்டுப் பதிவு மந்தமானது.
வழக்கமாக விரலில் வைத்த மை அழிகிறது என்ற புகார்கள் எழும். இந்த முறை மை அழிந்ததாக எவ்வித புகாரும்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுவாரியாக கோவை மாவட்டத்தில் நடந்த வாக்குப்பதிவுகளின் சதவீத விபரம் வருமாறு: (இறுதியானதுஅல்ல, சிறுமாறுதல்கள் இருக்கலாம்)
தாராபுரம் - 51, திருப்பூர் - 53, மேட்டுப்பாளையம் -55, அவிநாசி - 55, தொண்டாமுத்தூர் - 58, கோவை கிழக்கு- 54, பேரூர் - 54, கோவை மேற்கு - 51, கிணத்துக்கடவு - 52, பொள்ளாச்சி - 56, வால்பாறை - 57, உடுமலை - 55,பொங்கலூர் - 58, பல்லடம் 62. இந்த சதவீதத்தில் சிறு மாறுதல்கள் இருக்கலாம் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
அடையாள அட்டையிருந்தும் வாக்களிக்க முடியாமல் திணறியவர்களால் 5 சதவீத வாக்குகள் பதிவாகவில்லைஎனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications