ஜெ. முதல்வராக ஆளுநர் அனுமதிப்பாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவின் கனவை தவிடு பொடியாக்கிவிட்டு மீண்டும் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறார் ஜெயலலிதா.

234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 195 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இதையடுத்து முதல்வர் கருணாநிதியும் தனது முதல்வர் பதவியைராஜினாமா செய்துவிட்டார்.

ஆனால், அதிமுகவுக்கு மட்டும் கிட்டத்தட்ட 130 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சிஅமைக்க 117 எம்.எல்.ஏக்கள் போதும்.

ஜெயலலிதாவுக்கு சாதகமாக இத்தனை விஷயங்கள் இருந்தாலும் அவர் மீண்டும்முதல்வராக முடியுமா என்பது இன்னும் குழப்பமாகத் தான் உள்ளது.

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் 4 வேட்பு மனுக்களையும்தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிடமுடியாமல் போனது.

சட்டப்படி ஒருவர் முதல்வரான பின்னர் 6 மாதத்தில் எம்.எல்.ஏ. ஆனால் போதும்.

இதன் அடிப்படையில் ஜெயலலிதா தனக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கோருவார் ஜெயலலிதா.

ஆனால், அவருக்கு ஆளுனர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணம் செய்து வைப்பாராஎன்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியானபாத்திமா பீவி சட்ட நுணுக்கங்களை அறிந்தவர். இருந்தாலும் மூத்த வழக்கறிஞர்களைஅழைத்து அவர் ஜெயலலிதா தொடர்பாக ஆலோசனைகள் நடத்தியிருக்கிறார்.

தன்னை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என ஜெயலலிதா நம்பிக்கைதெரிவித்துள்ளார்.

ஆனால், கருணாநிதியும் பிற எதிர்க் கட்சிகளும் ஜெயலலிதாவை ஆட்சி அமைக்கஆளுனர் அழைக்க மாட்டார் எனக் கூறி வருகின்றன.

2 நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+