அரசு அலுவலகங்களில் கருணாநிதி படங்கள் நீக்கம்
கோவை:
ஆட்சி மாறியவுடன் அரசு அலுவலகங்களில் காட்சிகளும் மாறத் தொடங்கிவிட்டன.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரசு அலுவலகங்களில் அவருடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தப் படங்களை அதிமுகவினர் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து மாற்றக் கூறினர். இதனால் அனைத்துஅலுவலகங்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மாட்டப்பட்டு வருகின்றன.
இதுதவிர, பஸ்களிலும், சில பஸ் ஸ்டாப்புகளிலும் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் இருந்த வாசகங்கள்அழிக்கப்பட்டுவிட்டன.
"விவேகம் என்னும் வெள்ளி முளைத்து, சாதிமத பித்து என்னும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் என்னும்ஞாயிறு பிறக்கும் "நான், நீ, என்றால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் தான் உதடுகள்கூட ஒட்டும்" என்றவாசகங்கள் தற்போது பெயின்ட் பூசி அழிக்கப்பட்டு விட்டன.
தற்போது, அந்த இடங்களில் வழக்கமாக இருக்கும் "சிரம், கரம் புறம் நீட்டாதீர்", "ஆண்கள்", "பெண்கள்" என்றவார்த்தைகளே இடம் பெற்றுள்ளன.
திமுக ஆட்சிக் காலத்தில்தான் பேருந்துகளின் பெயர்கள் , அரசுப் பேருந்துக் கழகம் என மாற்றப்பட்டது. மீண்டும்இந்த பேருந்துகளுக்கு வேறு ஏதாவது பெயர்கள் சூட்டப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications