தி.மு.கவுக்காக மொட்டை போட்ட சிறுவன்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாவிட்டால் மொட்டை அடித்துக் கொள்வேன் என பந்தயம் கட்டியசிறுவன் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக மொட்டை அடித்துக் கொண்டார்.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் ஆட்டோ டிரைவராக இருந்து வருபவர் வெங்கடேஷ். இவரது மகன்கதிரவன் (வயது 11). இவர் 6வது வகுப்பு படித்து வருகிறார்.

வெங்கடேஷ் தீவிர தி.மு.க ஆதரவாளர். கதிரவன் தன் தந்தையுடன் நடக்கும் தி.மு.க. கூட்டங்களுக்கு செல்வதுவழக்கம். அவரும் தி.மு.க. ஆதரவாளராகி விட்டார்.

சில தினங்களுக்கு முன் தமிழக தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என வெங்கடேஷ் தன்நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கதிரவன் மீண்டும் தி.மு.கதான் வெல்லும்.கருணாநிதிதான் முதல்வராக வருவார் என்றார்.

வெங்கடேஷின் நண்பரும், தி.மு.க. ஆதரவாளருமான நல்லசிவம் (வயது 45) என்பவர் அ.தி.மு.கதான் வெற்றிபெறும் என்றார். கதிரவனுக்கும், நல்ல சிவத்திற்கும் இடையேயான விவாதம் முற்றி பந்தயத்தில் சென்று முடிந்தது.

தி.மு.க. தோற்றால் தான் மொட்டையடித்துக் கொள்வதாக கதிரவன் பந்தயம் போட்டார்.தி.மு.க.தோல்வியடைந்ததால் தான் ஒப்புக் கொண்டபடி மொட்டை அடித்துக் கொண்டார் கதிரவன்.

இது குறித்து கதிரவன் கூறுகையில், கருணாநிதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார். மக்களுக்கு நல்லதுசெய்தார். அதனால் அவர் வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கையில் பந்தயம் கட்டினேன். பந்தயத்தில் தோற்றுவிட்டேன். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதுதானே முறை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+