ஜெ. மீதான வழக்கு மே 28க்கு ஒத்தி வைப்பு
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீதான ரூ.1 கோடி வருமான வரி ஏய்ப்புவழக்கு விசாரணை மே 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 1993-94ஆம் ஆண்டில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக ஜெயலலிதாவின் மீது வழக்கு தொடரப்பட்டது.தற்போது இவ்வழக்கில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது.
இவ்வழக்கில் குறுக்கு விசாரணை செய்வதற்காக, மே 15 ஆம் தேதி ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால், அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்த பின்பு ஜெயலலிதாவை விசாரிப்பதுதான் சட்டப்படிசரியானது என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை மீண்டும் திங்கள்கிழமை வந்தது. அரசு சாட்சிகள் 3 பேரிடமும் குறுக்கு விசாரணைநடந்து முடிந்து விட்டதால் மறுவிசாரணைக்கு அவசியமில்லை என்று வருமான வரித்துறை வழக்கறிஞர் ராமசாமிதன் மனுவில் கூறினார்.
இதையடுத்து, இவ்வழக்கு விசாரணை மே 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை எழும்பூர்பொருளாதாரக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கே. பெருமாள் உத்தரவு பிறப்பித்தார்.