For Quick Alerts
For Daily Alerts
Just In
புதுவை அமைச்சரவையில் அதிமுக? சோனியா முடிவு செய்வார்
காஞ்சிபுரம்:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி அமைக்கவிருக்கும் அமைச்சரவையில் அதிமுகவும் இடம்பெறுவது குறித்து,அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திதான் முடிவு செய்வார் என்று பாண்டிச்சேரி முதல்வராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ப. சண்முகம் கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தியபின் அவர் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ்-தமாகா அரசு அமைவதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை. ஆனால் அதிமுகவும் அரசில்இடம் பெற்றால், மேலும் வலுவான அரசாக எங்கள் அரசு விளங்கும். இதுகுறித்து தமிழக முதல்வரும் அதிமுகபொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுடன் சோனியாகாந்தி பேசி முடிவு செய்வார். ஏற்கனவே நான்ஜெயலலிதாவுடன் நான் பேசிவிட்டேன் என்றார் சண்முகம்.
Comments
Story first published: Tuesday, May 22, 2001, 5:30 [IST]