இறந்த ரவுடியின் எலும்புக்கூடுகள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

20 மாதங்களுக்கு முன்பு பல்லடத்தில் கொலை செய்யப்பட்ட ரவுடியின் எலும்புகளை கிணற்றில் இருந்து போலீசார்மீட்டனர்.

கோவை அருகே உள்ள சேடபாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் பிரபல ரவுடி. அதே ஊரைச்சேர்ந்தவர் மலபார் மணி. இவரும் ஒரு ரவுடி.

மணிக்கும், நாராயணசாமிக்கும் பல மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 1999ஆம்ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி இரவு நாராயணசாமியை அடித்துக் கொலை செய்துள்ளார் மணி. பின்னர்நாராயணசாமியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகில் இருந்த கிணற்றில் போட்டுள்ளார்.

சில நாட்களுக்கு பின்தான் நாராயணசாமியைக் காணததால், மக்கள் மணியிடம் விசாரித்தனர். ஆனால் மணியோ,அவரை அடித்து கிணற்றில் போட்டு விட்டதாக கூறியுள்ளார். இதனை மக்கள் நம்பவில்லை. சில நாட்களுக்குப்பிறகு கிணற்றில் தண்ணீர் குறைந்தது. அப்போது அங்கு உடல் கிடப்பததற்கான அறிகுறி தெரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கிணற்றுக்குள் இறங்கி எலும்புக் கூடாகிப் போன நாராயணசாமியின்உடலை மீட்டனர். இந்த எலும்புகளை ரசாயனப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மணியைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+