யார் இந்த சண்முகம்?
பாண்டிச்சேரி:
யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பா. சண்முகம்பாண்டிச்சேரியின் 14 வது முதலமைச்சராவார். அவருக்கு வயது 74.
இவர் 1927 ம் ஆண்டு மார்ச் மாதம் 28 ம் தேதி காரைக்கால் மாவட்டம் கரும்பகரம் என்ற ஊரில் பிறந்தார். இவர்முதன்முதலாக தனது தொகுதியான நெடுங்காட்டிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1964 ம் ஆண்டு பாண்டிச்சேரி முதல்வராக வெங்கடசுப்ரமணியம் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அவரதுஅமைச்சரவையில் சண்முகம் சுகாதாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பின்னர் 1969 ம் ஆண்டு இவர் தனது சொந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது சிறந்தஎதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.
சண்முகம், நேரு குடும்பத்துக்கு மிகவும் நெருங்கியவர். இவர் 2000 மாவது ஆண்டு பாண்டிச்சேரி முதல்வராகத்தேர்ந்தெடுக்கப்படும் வரை பாண்டிச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தார்.
சண்முகம் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர். இதற்காகப் பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர்.
1980 முதல் 1989 ம் ஆண்டு வரை மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 2000 மாவது ஆண்டு மார்ச் மாதம் 22 ம் தேதி முதல் முறையாகபாண்டிச்சேரி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
யு.என்.ஐ.