ஜீப் மோதியதில் கான்ஸ்டபிள் சாவு
சென்னை:
போலீஸ் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி கான்ஸ்டபிள் மேல் மோதியதில் அவர் அந்த இடத்திலேயேஉயிரிழந்தார்.
சென்னை அண்ணாநகர் கிழக்கில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 28). அயனாவரத்தில் வசித்து வருபவர்கள்கோபிநாத் (வயது 28), ஜெய் சங்கர் (வயது 25).
இவர்கள் மூவரும் வீராபுரம் டி.எஸ்.பி.,மூன்றாவது பட்டாலியனில் கான்ஸ்டபிள்கள். இவர்கள் தற்சமயம் சென்னைதிருமங்கலம் கம்பர் குடியிருப்பில் இருக்கும் தமிழக சிறப்பு காவல்படை கமாண்டன்ட் ராதாகிருஷ்ணன் வீட்டில்ஆர்டர்லியாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை டி.எஸ்.பி. வீட்டிலிருந்த போலீஸ் ஜீப்பை கோபிநாத் கிளப்பினார். அந்த ஜீப்கட்டுப்பாட்டை இழந்து ஓடத் துவங்கியது. அது நேராக எதிரே நின்றிருந்த நடராஜன் மீது மோதியது. நடராஜன்அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இவர்கள் மூவருக்குமே ஜீப் ஓட்டத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் இந்த சம்பவம் குறித்துவிசாரணை செய்து வருகிறார்கள்.