கே.சி.பந்த்- காஷ்மீர் தீவிரவாத அமைப்பு தலைவர் பேச்சுவார்த்தை
ஸ்ரீநகர்:
காஷ்மீரிலுள்ள ஜனநாயக விடுதலை கட்சி (டி.எப்.பி.) என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் ஷாபீர் ஷா,கே.சி.பந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியிலும், பேச்சு வார்த்தையிலும் ஈடுபடுவதற்கு இந்திய அரசின்சார்பில் கே.சி பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் திங்கள்கிழமை காஷ்மீர் போய்ச் சேர்ந்தார். இவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக காஷ்மீர்தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான ஜனநாயக விடுதலை கட்சியின் தலைவர் ஷாபீர்ஷா கூறியுள்ளார்.
இது குறித்து ஜம்மூ-காஷ்மீரின் கோடைகால தலைநகரமான ஜம்முவில் இருக்கும் டி.எப்.பி.யின் தலைமையகத்தில்திங்கள்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், கே.சி.பந்துடன் பேச்சு வார்த்தை நடத்த நான்தயாராக இருக்கிறேன். ஆனால் இது சம்பிரதாயமற்ற பேச்சு வார்த்தையாகத்தான் இருக்கும்.
நல்ல முறையில், சம்பிரதாய முறையிலான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நம்பகமான சூழ்நிலை உருவாகவேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நடக்கும். பேச்சுவார்த்தை நடப்பதற்கும் ஒருஅர்த்தம் இருக்கும்.
பந்த் தனது மக்களை பார்த்து பேசப் போவதாக கூறியுள்ளார். அவர் தேசிய கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்டபலரையும் சந்தித்து பேசட்டும். என்னை பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் நான் அவர்களுடன் பேச்சு வார்த்தைநடத்த தயாராக இருக்கிறேன். ஆனால் அதுவும் சம்பிரதாயமற்ற முறையில்தான் இருக்கும்.
முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தேவையான சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால் அதற்கு தேவையான முயற்சியில்ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வரும் அக்கிரமத்தை நிறுத்த வேண்டும். பிடித்து வைத்திருக்கும் அனைவரையும்விடுவிக்க வேண்டும்.
இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் விதமான பேச்சுவார்த்தைக்குரியசரியான சூழ்நிலைக்கு வழி வகுக்கும்.
காஷ்மீரில் சண்டை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதும் கவலையளிக்கிறது என்றார்.
டி.எப்.பி. தலைமையகத்திற்கு அருகே பலத்த காவல் போடப்பட்டிருந்தது. இந்த அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள்குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு காவல் பலப்படுத்தப்பட்டிருந்தது.
பந்த 7 நாள் பயணமாக காஷமீருக்கு திங்கள்கிழமை வந்தார். இவர் இந்த பயணத்தின் போது லே மற்றும் கார்கில்பகுதிகளுக்கும் செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications