புதுவையில் மாணவர்கள் சாதனை
பாண்டிச்சேரி:
நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு தேர்வுகளில் பாண்டிச்சேரியில் ஆண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டைப் போலவே, பாண்டிச்சேரியிலும் 12ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமைவெளியிடப்பட்டன.
இதுகுறித்து பாண்டிச்சேரி மாநிலக் கல்வி செயலாளர் (பொறுப்பு) நரேந்திரகுமார் கூறியதாவது:
இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 85.45 சதவீதம் பேர் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு ஆண்களின் தேர்ச்சி விகிதம் அதிக அளவில் இருந்தது. தேர்ச்சிஅடைந்தவர்களில் 85.55 சதவீதம் பேர் ஆண்கள். பெண்களின் தேர்ச்சி சதவிகிதம் 85.37 ஆகும்.
இம்மாநிலத்தைச் சேர்ந்த 8 தனியார் பள்ளிகளில் 100 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் விஜய் வெங்கடேஷ் 1176 மதிப்பெண்கள் பெற்று, பாண்டிச்சேரிமாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். 1174 மதிப்பெண்களுடன் பெடிட் செமினார் பள்ளி மாணவர் இரண்டாவதுஇடத்தைப் பிடித்தார்.
90 சதவிகிதத்திற்கும் அதிக அளவில் தேர்ச்சி அளித்ததற்காக, காரைக்காலில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியும், வில்லியனூரில் உள்ள கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளியும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாகஅரசிடமிருந்து பெறுகின்றன என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications