உழவர் சந்தைப் பேருந்துகள் திடீர் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் உழவர் சந்தைக்கு விடப்பட்ட பேருந்துகள் திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டன.
திண்டுக்கல் உழவர் சந்தையில் பொதுவாகவே சனி, ஞாயிறுகளில் கூட்டம் நன்றாக இருக்கும். வழக்கத்தைவிடஅதிக அளவில் காய்கறிகள் விற்பனையாகும்.
திண்டுக்கல் உழவர் சந்தைக்கு, அருகில் உள்ள கிராமங்களில் இருந்து காய்கறிகளை இலவசமாக ஏற்றிக் கொண்டுவழக்கமாக வரும் பேருந்துகள், கடந்த 2 நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் காய்கறிகளைக் கொண்டுவரமுடியாமல் விவசாயிகள் திணறினர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவிவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications