For Daily Alerts
Just In
வெள்ளத்தில் சிக்கி இறந்த 4 பேரின் உடல்கள் மீட்பு
கோவை:
கல்லாறில் உள்ள நீர் வீழ்ச்சியில் விழுந்து இறந்து போன 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
கல்லார் பழப்பண்ணை நீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் ஒரு பெண் அடித்துச் செல்லப்பட்டுஇறந்தார். இவரது உடல் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது.
இதே வெள்ளத்தில் சிக்கிய மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிலால் (20), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எஸ். ராஜேஷ்(15), அனிருத்ராம் (9), மருதமலையைச் சேர்ந்த சுரேஷ்ராம் (35) ஆகியோரைத் தேடும் பணியில் போலீசார் மற்றும்தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
இவர்களது உடல் செவ்வாய்க்கிழமை மதியம் மீட்கப்பட்டது.
இந்த உடல்கள் அனைத்தும் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காகக் அனுப்பிவைக்கப்பட்டன.
Comments
Story first published: Tuesday, May 29, 2001, 5:30 [IST]