For Daily Alerts
Just In
உழவர் சந்தையை மூட த.மா.கா. எதிர்ப்பு
கோவை:
பொதுமக்களுக்கப் பயன் அளித்து வரும் உழவர் சந்தையை மூடக் கூடாது எனவலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
செயல்படாத உழவர் சந்தைகள் மூடப்படும் என ஆளுநர் உரையில் கூறப்பட்டது.இதற்கு அ.தி.மு.க வின் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது. சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இது குறித்துநிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் கூறியுள்ளதாவது:
செயல்படாத உழவர் சந்தைகள் மூடப்படும் எனக்ஆளுநர் உரையில் கூறப்பட்டதுபோல உள்ள உழவர் சந்தைகள் எதையும் மூடக் கூடாது. பொதுமக்களுப் பயன்பட்டுவரும் சந்தையாக உழவர் சந்தை உள்ளது.
இங்கு நியாயமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.ஆகவே பொதுமக்களின் வசதியை முன்னிட்டு இந்த சந்தைகளை மூடுவதைதவிர்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Story first published: Tuesday, May 29, 2001, 5:30 [IST]