For Quick Alerts
For Daily Alerts
Just In
விஷ வாயு தாக்கி 2 பேர் சாவு
சென்னை:
சென்னையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் இறந்தனர்.
சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கிணறு தூர் வாறும் பணி செவ்வாய்க்கிழமை நடந்தது.இந்தப் பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
முதல் தொழிலாளி உள்ளே இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஷ வாயு தாக்கியது. இதில் அவர்மயங்கி விழுந்து உயிருக்குப் போராடினார். இதையடுத்து இன்னொரு தொழிலாளி உள்ளே இறங்கி அவரைக்காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் விஷ வாயு தாக்கியது.
இதில் 2 தொழிலாளர்களும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, May 30, 2001, 5:30 [IST]