புதுவையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முதல்வர் சண்முகம் தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை பிற்பகல் விரிவாக்கம்செய்யப்பட்டது.
புதிய அமைச்சரவையில் 4 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
பாண்டிச்சேரி கவர்னர் ரஜினிராய் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப்பிரமாணமும்செய்து வைத்தார்.
புதிய அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரங்கசாமி, சுப்ரமணியன், தமாகாவைச் சேர்ந்ததேனி.ஜெயக்குமார் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த காசிலிங்கம் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
ராஜ்நிவாசில் நடந்த எளிய நிகழ்ச்சியில் இவர்கள் நால்வரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய அமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே 2 முறை அமைச்சராக இருந்தவர். சுப்ரமணியம் பாண்டிச்சேரி சட்டசபைசபாநாயகராக இருந்தவர். தேனி ஜெயக்குமாரும் அமைச்சராக இருந்தவரே.
அதிமுக சார்பில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள காசிலிங்கம் சட்டசபைக்குப் புதியவர்.
பாண்டிச்சேரி சட்டசபையில் 24 வருடங்களுக்குப் பிறகு அதிமுகவுக்கு இடம் கிடைத்துள்ளது. 1977 ம் ஆண்டில்ராமசாமி என்பவர் அதிமுக சார்பில் பாண்டிச்சேரியில் அமைச்சராக இருந்தார். அதற்குப்பின்பு இதுவரை அதிமுக,காங்கிரஸூக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில், பாண்டிச்சேரி கங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமிஉள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications