ஜூன் 5ல் வாஜ்பாயுடன் ஜெ.சந்திப்பு
சென்னை:
ஜூன் மாதம் 5ம் தேதி பிரதமர் வாஜ்பாயை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிதலைவர் மூப்பனார் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் சென்னையில் இருக்கும் 5 நட்சத்திர ஹோட்டல் ஒனறில்விருந்தளித்தார்.
இந்த விருந்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இந்த விருந்தில் கலந்து கொண்ட இந்தியமுஸ்லிம் லீக் தமிழக தலைவர் அப்துல் வகாப் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த மாதம் 5ம் தேதி நடக்கவிருக்கும் காயிதே மில்லத் நினைவு நாள் விழாவில் கலந்து கொள்ளவருமாறு அவர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் அதேநாளில் தான் டெல்லியில் பிரதமர் வாஜ்பாயை சந்திக்கவிருப்பதால் தன்னால் விழாவில் கலந்துகொள்ள முடியாது எனவும், தன் சார்பில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் கூறினார்.
தமிழக முதல்வராக பதவியேற்ற பின் ஜெயலலிதா முதன்முறையாக பிரதமரை சந்திக்க செல்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது. பிரதமரை சந்திப்பதற்காக ஜெயலலிதா 4ம் தேதி மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம்டெல்லி செல்கிறார்.












Click it and Unblock the Notifications