For Daily Alerts
Just In
ஜூன் 13 ல் ஓய்வு பெறுகிறார் கில்
டெல்லி:
தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் வரும் 13 ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
தேர்தல் கமிஷனில் கில் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராகப்பணியாற்றும் கில் வரும் 13 ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் 5 மாநில சட்டசபை தேர்தலை மிக அமைதியாகநடத்தி முடித்தவர்.
தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய இவரது சிறப்பான பணியை முன்னாள் பிரதமர் குஜரால், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கில்லுக்கு அனுப்பியுள்ள செய்தியில், எம்.எஸ்.கில் தனது பாரபட்சமற்றநடவடிக்கைகள் மூலம் தேர்தல் கமிஷனின் கவுரவத்தை உயர்த்தியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments
Story first published: Wednesday, June 6, 2001, 5:30 [IST]