பாக். சிறையிலிருந்து 157 இந்திய மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்:

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 157 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை இணை அமைச்சர் பாபுபாய் பொக்காரியா கூறியதாவது:

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் பாகிஸ்தான் எல்லையிலுள்ள கடலில் மீன்பிடித்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுவிப்பதற்கு மத்திய அரசுமுயற்சி மேற்கொண்டது.

இதையடுத்து கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 157 மீனவர்களை இப்போது விடுதலை செய்துள்ளனர்.விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 25 படகுகள் மூலம் இந்தியா திரும்புவார்கள்.

விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தவிர குஜராத்தைச் சேர்ந்த 202 மீனவர்கள் இன்னும் பாகிஸ்தான்சிறையிலேயே உள்ளனர் என்றார்.

சமீபத்தில் 160 இந்திய மீனவர்கள், பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+