தமிழக அரசு வக்கீலாக கோமதிநாயகம் நியமனம்
சென்னை:
தமிழக அரசின் வக்கீலாக நியமிக்கபட்ட கோமதிநாயகம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தில் சென்ற தி.மு.க ஆட்சி காலத்தில் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றியபலரும் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பல புதிய வழக்கறிஞர்கள் அரசு வக்கீல்களாகநியமிக்கப்பட்டனர்.
முன்னதாக மாநில அரசு வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தததால் அந்தபதவிக்கு கோமதிநாயகம் நியமிக்கப்பட்டார்.
அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் பல சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலும் ஆஜராகியுள்ளார். சென்னை குடிநீர் வாரியம், வீட்டு வசதிவாரியம், குடிசை மாற்று வாரியம், கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளிலும் சட்டஆலோசராகபணியாற்றியுள்ளார்.
தடா மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டவழக்குகளிலும் இவர் ஆஜராகியுள்ளார். அல் உம்மா குண்டு வெடிப்புவழக்கிலும் இவர் ஆஜரானார்.