மேட்டூர் அணையில் நீர் குறைகிறது: விவசாயிகள் கவலை

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரின் அளவு இன்னும் 40 நாட்களுக்கே பாசனத்திற்குப் போதுமானதாக உள்ளது.எனவே, பாசன விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இப்போது நீர்மட்டம் குறைந்து வருகிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில்தற்போது 63 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

இதில் 2.54 டி.எம்.சி. அளவு தண்ணீர் இருப்பு வைக்கப்படும். மீன்கள் உயிருடன் இருக்கவும், குடிநீருக்காகவும்இந்த தண்ணீர் இருப்பு அவசியம்.

கடந்த ஜூன் முதல் வாரத்தில் கர்நாடக மாநிலம் 2.54 டி.எம்.சி. தண்ணீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 1.06டி.எம்.சி. தண்ணீர்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 4 அணைகள் உள்ளன. இவற்றில், 3 அணைகளில் தண்ணீர் இல்லை. பருவமழைபொய்த்ததால், இந்த அணைகளில் தண்ணீர் நிரம்பவில்லை. ஒரு அணையில் மட்டும் 2.9 டி.எம்.சி. தண்ணீர்உள்ளது.

மேட்டூர் அணையில் தற்போதுள்ள 63 டி.எம்.சி. தண்ணீர் இனி வரும் 40 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்குப்பயன்படும்.

பாசனத்திற்கு தினம் 1 டி.எம்.சி. முதல் 1.25 டி.எம்.சி. தண்ணீர் வரை திறந்து விடப்படுகிறது. பருவமழைபொய்த்தால் காவிரி டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்பது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+