For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டான்சி வழக்கு: ஜெ. அப்பீலைத் தடை செய்ய சுவாமி மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டான்சி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா அப்பீல் செய்த மனுவை விசாரிக்கத்தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் மனுவில் மேலும் கூறியிருப்பதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(3) பிரிவின்கீழ் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்ற ஜெயலலிதாவைமுதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் தமிழக ஆளுநர்.

டான்சி நிலம் தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளும், சசிஎன்டர்பிரைசஸ் வழக்கில் 2 ஆண்டுகளும் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இது தவிர பிளசன்ட் ஸ்டேவழக்கில் அவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த அனைத்து தண்டனைகளையும் எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்தவழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன.

டான்சி நில ஊழலை முதலில் வெளிக் கொண்டு வந்தது நான்தான். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்ஜெயலலிதாதான். வழக்கைத் தொடுத்த அரசு நிர்வாக தலைமை பொறுப்பில் இவர்தான் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், இந்த அப்பீல் வழக்கை தமிழக அரசு நியாயமான முறையில் எதிர்கொள்ளும் என்றுஎதிர்பார்க்க முடியாது. அரசுத் தரப்பில் வேண்டுமென்றே வழக்கைச் சரியாக நடத்த மாட்டார்கள். இந்தக்குழப்பத்தில் நியாயம் கிடைக்காது.

ஜெயலலிதா முதல்வராகப் பதவி வகிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் விசாரித்துமுடியும் வரை, டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே அப்பீல் வழக்குகளை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார் சுவாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X