கருணாநிதி சொன்ன காக்கை மூப்பனார்தான்: வாழப்பாடி
சென்னை:
தன் பிறந்த நாளில் "காக்கைகள்" கலந்து கொள்ளவில்லை என்று மூப்பனாரைத்தான் கருணாநிதி குறிப்பிட்டதாகவாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஜெயலலிதா செய்யும் நல்ல செயல்களைப் பாராட்டுவோம். தவறு செய்தால் தட்டிக் கேட்போம்.
தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இதுகுறித்து ஜூலை 15ம் தேதி விவாதிக்கப்படும்.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் மூப்பனார்கலந்து கொள்ளவில்லை. வீணாக ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை அவர்.
தன் பிறந்தநாளுக்கு மூப்பனார் வரவில்லை என்பதைத்தான் பிறந்தநாள் விழாவுக்கு காக்கைகள் வரவில்லை என்றுகருணாநிதி மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்
மூப்பனார் வைத்த விருந்தில் ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை. ராமதாஸை மக்கள் புறக்கணித்து விட்டனர்.அதனால் தான் அவர் அவமானத்தோடு விருந்துக்கு வரவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார். வெற்றி பெறும் போது மக்கள்தீர்ப்பு என்று கூறும் அவர், தோல்வி அடையும் போது மக்கள் தீர்ப்பை தூக்கியெறிந்து பேசுகிறார். இது அவரதுமனநோயாளித்தனமான மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின்போது கூட்டணி அமைப்பதில் ஸ்டாலின் கூறுவதைக் கேட்டு கூட்டணிஅமைத்தார் கருணாநிதி. அதனால் தான் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது.
ஆனால் கருணாநிதியோ கூட்டணிக் கட்சிகள் வெளியேறியதால்தான் திமுக தோற்றது என்று கூறி வருகிறார்கருணாநிதி.
தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாமல் இருப்பதற்கான அனைத்து சூழ்ச்சிகளையும் செய்தவர் கருணாநிதி.தனக்கு எதிர்காலத்தில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாதே என்ற காரணத்தினால்தான் அவர்எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றார் என்றார் வாழப்பாடி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications