வீரப்பனைப் பிடிக்க நாளை சென்னையில் கூட்டம்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காகப் பல புதிய திட்டங்களை வகுப்பதற்காக திங்கள்கிழமை சென்னையில்முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக, கர்நாடக மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்கள் பெஜாவர் சங்கர் மற்றும் தெரசா பட்டாச்சார்யாஆகியோரும், அதிரடிப்படைகளின் புதிய தலைவர்கள் தமிழகத்தின் வால்டர் தேவாரம், கர்நாடகத்தின் கெம்பையாஆகியோரும் இக்கூட்டத்தில் பேச்சு நடத்துவார்கள்.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், 2 மாநிலங்களிலுமே வீரப்பனைப் பிடிப்பதற்கானசிறப்பு அதிரடிப்படை தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இம்முறை எப்படியும் வீரப்பனைப் பிடித்தே தீருவோம் என்று பலத்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார் தமிழகமுதல்வர் ஜெயலலிதா. ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி.யான தேவாரமும் வீரப்பனை மடக்கி விடுவோம் என்றுமீசையை முறுக்கிவிட்டு களத்தில் குதிக்கவிருக்கிறார்.
இந்த முறை கட்டாயம் வீரப்பன் பிடிபட்டு விடுவார் என்று கர்நாடக அரசும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், வீரப்பனைப் பிடிப்பதற்கான திட்டம் வகுக்கவிருக்கும் இந்தக் கூட்டம் அதிக முக்கியத்துவம்பெறுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.