பிஜே-10 ஏவுகணை சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிஜே-10 ஏவுகணை செவ்வாய்க்கிழமை காலை விண்ணில் வெற்றிகரமாகஏவப்பட்டது.
ஒரிஸ்ஸாவின் கடற்கரையை ஒட்டிய சந்திப்பூரில் இந்த ஏவுகணைச் சோதனை நடைபெற்றது.
6.9 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை 280 கி.மீ. தூரத்திற்குச் சென்று தாக்கும் இயல்புடையது. ஏவிய 5நிமிடங்களுக்குள் இலக்கைத் தாக்கவல்லது இந்த பிஜே-10 ஏவுகணை.
எதிரி நாட்டின் கப்பலைத் தாக்கி அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகர் ஆட்ரேஉள்பட நூற்றுக்கணக்கான இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் செவ்வாய்க்கிழமைகாலை 10.17 மணிக்கு ஏவப்பட்ட ஏவுகணையை நேரில் பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications