நெசவாளர்களுக்கு நலத்திட்டப் பணிகள் ஆரம்பம்
ஈரோடு:
கைத்தறி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான சிட்ட நூல்கள் தேவையான அளவிற்கு கிடைக்க உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநில கைத்தறித் துறை அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்.
சென்னிமலையில் கைத்தறி நெசவாளர்களுக்கான தொழில் கூடத்துடன் கூடிய 1010 வீடுகளுக்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது. இந்தவிழாவில் கலந்து கொண்ட மாநில கைத்தறித் துறை அமைச்சர் சண்முகநாதன்பேசியதாவது:
கைத்தறி நெசவாளர்களின் நலனை அரசு நிறைவேற்றும். இதன் முதல் கட்டமாக ஆயிரத்து10 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன.
சென்னிமலையில் அமைந்துள்ள இந்த வீடுகளிலேயே தொழில்கூடம் அமைக்கப்படுகிறது. மேலும்,இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தொழில் கூடத்தில் இலவச வேஷ்டி சேலைகள் நெசவு செய்யவும், மாணவ, மாணவிகளின் சீருடைகள்ஆகியவற்றை நெசவு செய்ய அரசு வேலை வாய்ப்பு வழங்கும் என்றார் சண்முகநாதன்.
விழாவில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.சி ராமசாமி பேசுகையில், மக்கள் நலத் திட்டங்கள்அனைத்தும் மக்களை நேரடியாக சென்றடைய முதல்வர் விரும்புகிறார். எனவே, மக்கள் நலத்திட்டங்களில் அரசுமுனைப்புடன் செயல்படும் என்றார்.












Click it and Unblock the Notifications