For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் வேட்டையில் வெல்வாரா தேவாரம்?

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

காட்டுக்குள் வீரப்பன் நாடகத்தின் அடுத்த அத்தியாயம் துவங்குகிறது. இந்த முறை, கதாநாயகனாகப்பொறுபேற்றிருக்கும் தேவாரம், இம்முறை வில்லனை வெற்றி காண "சத்திய சோதனைகளில் இறங்க வேண்டியகட்டாயத்தில் உள்ளார்.

வீரப்பனைப் பிடிக்க தமிழக கர்நாடக கூட்டு அதிரடிப்படையின் தலைவர் தேவாரம் விரைவில் காட்டுக்குள்செல்கிறார்.

அவர் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் மேட்டுப்பாளையம் வழியாக வீரப்பனைத் தேடி காட்டுக்குள் செல்லலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு உறுதுணையாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஜி. விஜயகுமார் பண்ணாரி முகாமைப்பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தனமரக்கடத்தல், காட்டு விலங்குகளையும் யானைகளையும் வேட்டையாடிதந்தம் கடத்தல், அதிகாரிகளைக் கொலை செய்தல், முக்கியப் பிரமுகர்களைக் கடத்திச் செல்லுதல் உட்பட காட்டில்ஒரு "தர்பாரை நடத்தி வந்த வீரப்பன் இப்போது தனிக் காட்டு ராஜாவாக இருந்து வருகிறார்.

"மாயாவி வீரப்பன் என்ற பெயருக்குப் பொருத்தமாக, ஒட்டு மொத்த போலீசுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிவருகிறார் வீரப்பன். வீரப்பனைப் பிடிக்கும் நாடகம் ஒரு தொடர் கதையாகவே தொடர்கிறது.

நாட்டில் ஆட்சி மாறியதும் காட்டில் இப்போது காட்சியும் மாறுகிறது. வீரப்பனைப் பிடிப்பதற்கான அடுத்தஅத்தியாயம் துவங்கிவிட்டது. இந்த அத்தியாயத்திற்கு வால்டர் தேவாரம் புது கதாநாயகனாகிறார். ஆனால்,வீரப்பன் என்ற வில்லன் மட்டும் மாறவே இல்லை.

ஒவ்வொரு முறையும் வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகம், அவனது தலை வெளியே தெரியும்போதுமட்டுமே ஏற்படும். யாரையாவது கடத்திச் சென்று அரசின் கவனத்திற்கு வீரப்பன் வந்தால், அதிரடிப்படை முடுக்கிவிடப்படும். ஆனால், இப்போது வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே காட்டுக்குள்ளே அதிரடிப்படைசெல்கிறது.

அதே சமயம் வீரப்பனின் தலைக்கும் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோடி ரூபாய்கொடுத்தாலும் வீரப்பன் தலை கிடைக்காது என்ற நிலை இப்போதும் நீடித்து வருகிறது.

தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர், மத்திய பாதுகாப்பு படை என நவீனஆயுதங்களுடன் காட்டுக்குள் முகாம் இருந்தாலும், பரந்து விரிந்து கிடக்கும் காட்டில் எந்த இடத்தில் வீரப்பன்இருக்கிறார் என்பது சிம்மசொப்பனமாகவே இருந்து வருகிறது.

எனவே, புதிதாக அதிரடிப்படைக்கு ஐ.ஜியாகப் பொறுப்பேற்றிருக்கும் விஜயகுமார், புதிய கோணத்தில் சிந்திக்கத்தொடங்கியுள்ளார்.

முதலில் வீரப்பனுக்குச் செல்லும் உதவிகளைத் தடுத்தும் நிறுத்தும் பணியை மேற்கொள்வது என்ற முடிவைஎடுத்துள்ளார். வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு உணவு செல்லும் விதத்தைக் கண்டறிய தீவிரமுயற்சியில் இறங்கவுள்ளார்.

எப்போதும் வீரப்பனுக்குப் பக்கபலமாக இருப்பவர் சேத்துக்குளி கோவிந்தன் மட்டுமே. தற்போது வீரப்பனுடன்தமிழ் விடுதலைப் படை என்ற அமைப்பும் கைகோர்த்துக் கொண்டுள்ளது. இந்த தமிழ் தீவிரவாத அமைப்பிற்குகாட்டுக்குள் வாழ போதுமான வசதி இல்லாததால், இதன் முக்கியத் தலைகள் போலீசில் சிக்கிக் கொண்டனர்.

இன்னும் சில கூட்டாளிகள் வீரப்பனுடன் இருந்து வருகின்றனர். கடந்த முறை நடந்த வேட்டையில் வீரப்பனைத்தொட்டு விட்டோம் என அதிரடிப்படையினர் கூறினாலும், வீரப்பனைப் பற்றிய உண்மையான தகவல்கள் எதுவும்கிடைக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X